18/04/2024

அரிசி வகைகள்.

உணவேமருந்து #மருந்தேஉணவு

*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*

*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*

*இதோ*👇

1. *கருப்பு கவுணி அரிசி*

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

3. *பூங்கார் அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. *காட்டுயானம் அரிசி* :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* : 

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 

6. *காலாநமக் அரிசி* :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 

7. *மூங்கில் அரிசி*:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 

8. *அறுபதாம் குறுவை அரிசி* :

எலும்பு சரியாகும். 

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 

10. *தங்கச்சம்பா அரிசி* : 

பல், இதயம் வலுவாகும். 

11. *கருங்குறுவை அரிசி* : 

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.யோக சக்தியையும் தரும்.

12. *கருடன் சம்பா அரிசி* :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. *கார் அரிசி* :

தோல் நோய் சரியாகும். 

14. *குடை வாழை அரிசி* : 

குடல் சுத்தமாகும். 

15. *கிச்சிலி சம்பா அரிசி* : 

பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

16. *நீலம் சம்பா அரிசி* : 

இரத்த சோகை நீங்கும். 

17. *சீரகச் சம்பா அரிசி* :

அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 

18. *தூய மல்லி அரிசி* :

உள் உறுப்புகள் வலுவாகும். 

19. *குழியடிச்சான் அரிசி* :

தாய்ப்பால் ஊறும். 

20. *சேலம் சன்னா அரிசி* : 

தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 

21. *பிசினி அரிசி* : 

மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 

22. *சூரக்குறுவை அரிசி* :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 

23. *வாலான் சம்பா அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 

24. *வாடன் சம்பா அரிசி* : 

அமைதியான தூக்கம் வரும்

25. *கை குத்தல்* 

உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

26. *சிவப்பு  மட்டை அரிசி* 

இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. 

27. *சிவப்பு அரிசி* 

கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

28. *குள்ளகாற் அரிசி* 

இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்

29. *கைக்குத்தல் பொன்னி*

எல்லா வயதினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தரும் மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது 

30. *அன்னமழகி*

மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.

31. *கல்லுண்டைச்சம்பா* 

இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்

32 *காடைச்சம்பா*

இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

33. *காளான் சம்பா*

உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.

34. *குறுஞ்சம்பா*

விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.

35. *கைவரை சம்பா*

உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். 

36 *சீதாபோகம்*

உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.

37  *புழுகுச்சம்பா*

வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.

38. *மணக்கத்தை*

தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.

39 *மணிச்சம்பா*

அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.

07/04/2024

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

*1.ADULT ஐந்துஎழுத்துக்கள்*
 *அதேபோல YOUTH*
*2.PERMANENT ஒன்பது எழுத்துக்கள்*
 *அதேபோல TEMPORARY.*
*3.GOOD நான்கு எழுத்துக்கள்*
 *அதேபோல EVIL.*
*4.BLACK ஐந்து எழுத்துக்கள்.*
*அதேபோல WHITE.*
*6.LIFE நான்கு எழுத்துக்கள்*
*அதேபோல DEAD.*
*7.HATE நான்கு எழுத்துக்கள்*
*அதேபோல LOVE.*
 *8.ENEMIES ஏழு எழுத்துக்கள்*
 *அதேபோல FRIENDS.*
*9.LYING ஐந்து எழுத்துக்கள்.*
*அதேபோல் TRUTH.*
*10.HURT நான்கு எழுத்துக்கள்.*
*அதேபோல் HEAL.*
*11.NEGATIVE எட்டு எழுத்துக்கள்-அதே போல POSITIVE.*
*12.FAILURE ஏழு எழுத்துக்கள்--அதே போல SUCCESS.*
*13.BELOW ஐந்து எழுத்துக்கள்.*
 *அதேபோல ABOVE.*
*14.CRY மூன்று எழுத்துக்கள்.*
*அதேபோல JOY.*
*15.ANGER ஐந்து எழுத்துக்கள்.*
 *அதேபோல HAPPY.*
*16.RIGHT ஐந்து எழுத்துக்கள்,*
*அதேபோல WRONG.*
*17.RICH நான்கு எழுத்துக்கள்.*
*அதேபோல POOR.*
*18.FAIL நான்கு எழுத்துக்கள்.*
*அதேபோலPASS.*
*19.KNOWLEDGE ஒன்பதுஎழுத்துக்கள்.*
*அதேபோல IGNORANCE.*!!

*வியப்பாக* *இருக்கிறது*
*இந்த ஒற்றுமை!!*

_இதிலிருந்து_ _அறியப்படும் நீதி_ 
_என்ன என்றால்,_

*LIFE is like a double edged sword but the choice we make determines our future.*!!!

இக்கரைக்கு அக்கரை பச்சை

நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!

1. கன மழைக்கு அஞ்சாதீர்கள். மிதமான மழைக்கு ஏங்காதீர்கள். அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள். அதுதான் நல்லது.

2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும். வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும். கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம். கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார்.

3. நாடகங்களுக்கு செல்லும் போது முன் வரிசையில் உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை என்பீர்கள். திரைப்படங்களுக்குச் செல்லும்போது, கடைசி வரிசைக்கு அடிபோடுவீர்கள். வாழ்க்கையில் நிலைப்பாடு ஒவ்வொன்றும் தொடர்புடையது. நிலையானது அல்ல!

4. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை. வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!

5. சரியான ஆசாமியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமில்லை. கிடைத்த ஆசாமியை சரியாகக் கையாள்வதுதான் முக்கியமனதாகும்!!

6. ஆரம்பத்தில் எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதைவிட, கடைசி வரை தொடர்ந்து எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்!

7. ஒவ்வொரு பிரச்சினைக்கும் (N+1) என்பதுதான் தீர்வு. இதில் N என்பது எத்தனை தீர்வுகளை நீங்கள் முயற்சித்தீர்கள் என்பதைக் குறிக்கும். 1 என்பது நீங்கள் முயற்சிக்காத தீர்வுகளைக் குறிக்கும்

8. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது, அதுதான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவுதான்!

9. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு கடவுள் கொடுக்கிறார், கொடுக்கிறார், விட்டும் கொடுக்கிறார். மன்னித்தும் விடுகிறார். ஆனால் மனிதன் பெறுகிறான், பெறுகிறான். காரியம் முடிந்தவுடன் கடைசியில் கடவுளையே மறந்துவிடுகிறான்!

10. இரண்டுவிதமான மக்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும்
( பைத்தியக்காரர்களும் ) குழந்தைகளுமாவார்கள். உங்கள் லட்சியங்களை அடைய பைத்தியக்காரகளைப் போல் இருங்கள். அடைந்தபின் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியடையுங்கள்.

11. மற்றவர்களுடைய உணர்வுகளோடு விளையாடாதீர்கள். நீங்கள் வெற்றி அடையலாம். ஆனால் அந்த மனிதரை நீங்கள் இழக்க நேரிடும்

12. வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் எல்லாம் கிடையாது. படிகள் மட்டும்தான் உண்டு!

வாழ்க வளமுடன் நலமுடன்....

24/03/2024

இட்லி - Idly

இட்லி வெந்திருக்குன்னு சொன்னா *Optimism...*
இட்லி வேகலைன்னு சொன்னா *Pessimism...*
இட்லியெல்லாம் சுட முடியாதுன்னு சொன்னா *Feminism...*
இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா *Journalism...*
இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா *Imperialism...*
இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் *Postmodernism...*
இட்லி மேல Made In Indiaன்னு சீல் வச்சா *Nationalism...*
இட்லி உமக்கு கிடையாதுன்னா *Facism...*
இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது *Socialism...*
இட்லி என்ன சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா 
*Racism...*
இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது *Realism...*
இதுக்குமேல இட்லி கிடையாதுன்னு சொன்னா 
*Capitalism...*
இட்லி மெஷீன்லே பண்ணினா *Modernism...*
இட்லி Fork and Spoon வெச்சி சாப்பிட்டா *Elitism...*
இட்லி NorthIndia-la நல்ல இருக்காதோன்னு நினைச்சா *Skepticism...*
இட்லி நல்லா இல்லைன்னு சொன்னா *Criticism...*
இட்லி மட்டும் தான் நல்ல காலை உணவுன்னு ஒத்தை காலில் நின்றால் *Fanaticism...*
இட்லி நன்றாக செமிச்சால் *Metabolism...*
இட்லி பிடிக்காதவரை எனக்கு பிடிக்காதுன்னு சொன்ன 
*Chauvinism...*
⚪Last One⚪
இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா *Escapism !!!*
*ஒரு இட்லிக்கு இவ்வளவு விளக்கம் தேவையா !?? என்று என்மேல் கடுப்பாகி... என்னை திட்ட நீங்க நினைத்தால், அது *Terrorism...*!!!

04/03/2024

வணிகர், வியாபாரி, தொழில் முனைவோர்

வணிகர் என்றால் என்ன ???

1 சொந்தப் பணத்தில் தொழில் தொடங்குகிறார்.

2 வணிகத்தின் முழுப் பொறுப்பு .

3 ஒரு வணிகத்தை நிறுவ அல்லது நடத்த கடினமாக உழைக்கிறார்.

4 நஷ்டத்திற்கு எந்த அரசும் பொறுப்பல்ல.

5 ஆனால் பல்வேறு வரி வடிவில் லாபத்தில் அரசுக்கு உரிமை உண்டு.

6 தனக்கும் தன் குடும்பத்துக்கும் தன் சொந்தப் பணத்தில் வைத்தியம் செய்கிறான்

7 அனைத்து பயணங்களையும் (குடும்பம் அல்லது வணிகம்) தனது சொந்த பணத்தில் செய்கிறார்.

8 குடும்ப உறுப்பினர்களின் கல்விச் செலவை அவர் தனது சொந்தப் பணத்தில் இருந்து கவனித்துக் கொள்கிறார்.

9 வணிகர் ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை அல்லது ஓய்வு பெற்றவுடன் எவரும் அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் பெறுவதில்லை.

10 வணிகர்களுக்கு எந்தவொரு அகவிலைப்படியும் கிடைக்காது.

11 வணிகருக்கு விடுப்பு இல்லை, அவர் செல்ல வேண்டியிருந்தால், குடும்ப உறுப்பினரின் கூடுதல் கடமை.

12 மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு வணிகர், பொருட்களை விற்ற பிறகு, அரசாங்கத்திடம் இருந்து சம்பளமோ கமிஷனோ பெறாத பொதுமக்களிடமிருந்து வரி வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்தி விடுகின்றார்., அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தையும் செலுத்தி விடுகின்றார்.

13 சமுதாய நலன் கருதி நன்கொடை அளிப்பது, உணவு வழங்குவது, சமூக-மத-அரசியல் பணிகளில் பங்களிப்பது போன்றவை.

14. வணிகர்களால் வேலைவாய்ப்பு உருவாகின்றது

15. வணிகர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கான செலவுகளையும் பல்வேறு சமயங்களில் ஏற்றுக் கொள்கின்றார்.

 மாறாக,

 அரசு வேலையில், 
அவரது கடின உழைப்புக்கு சம்பளம், உதவித்தொகை, பயணப்படி, குடும்பம் மற்றும் ஓய்வு பெற்றவுடன் நிலையான அகவிலைப்படி ஓய்வூதியம் என அனைத்தும் உள்ளது. இத்தனைக்குப் பிறகும் ஒரு மாதத்தில் குறைந்தது 4 முதல் 6 விடுமுறைகள் கிடைக்கும்.

  நாமும் நம் நாடும் நம் அரசியல் அமைப்பு சட்டங்களும் எங்கே போகிறது என்று சிந்தியுங்கள்.

 இப்போது வணிகர்களை மரியாதையுடன் நடத்துவது அவசியம். அரசு, நிர்வாகம், பொதுமக்கள் அனைவரும் தங்கள் எண்ணங்களில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். 
படித்தேன் பகிர்ந்தேன் 🙏🏼

25/06/2023

குரங்கு பாம்பு குட்டிக்கதை

🌼ஒரு பாம்பு 🐍🪱 வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. 

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு 🐒 வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கழுத்தை விளையாட்டாய் தன் கையில் பிடித்து விட்டது. 

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . 

குட்டி குரங்குக்குக் கொஞ்சம் பயம்
 வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . 
இது கொத்துனா உடனே மரணந்தான். 

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது 

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , 

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,  

மரண பயம் எல்லாம் சேர்ந்து குட்டி குரங்கை வாட்டி வதைத்தன. 

"ஐயோ. புத்தி கெட்டுப் போய் 
நானே வலிய வந்து இந்த
 மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே". 
 
குட்டி குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

 கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். 

குட்டி குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. 

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. 
 
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது. 

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .🪱
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது .🐵 அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

 🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள். 

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். 

எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

என்றும் மெல்லிய புன்னகையுடன் இருங்கள் .

யாரிடமும் முடிந்தவரை கோபப்படாமல் இருங்கள். அனைவரிடமும் அன்புடன் பேசுங்கள்.

   எப்போதும் தெய்வ நம்பிக்கையுடன் இருங்கள்.

எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணுங்கள்.

   உண்மையான
உறவுகளையும் நண்பர்களையும் பிரிந்துவிடாதீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற
வாழ்க வளமுடன்🙏🍁☘️💞 

28/11/2022

தமிழ்ப்பேரரசுகள்

❤️ #தமிழ்ப்பேரரசுகள் ❤️

உலகிலே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியலில் முதல் நான்கில், மூன்று தமிழ் பேரரசு என்பதனை மாணவர்கள் கேட்டு அதிர்ந்தார்கள். அவர்களுக்குரிய பிரிட்டிஷ் பேரரசு நாற்பத்தி எட்டாவது இடத்தில் இருந்தது.

சேர ஆட்சிகாலம் - 430 கி.பி. - 1102 = 1532 ஆண்டுகள்
சோழ ஆட்சிகாலம் - 301 கி.பி. - 1279 = 1580 ஆண்டுகள்
பாண்டியர் ஆட்சிகாலம் - 580 கி.பி. -1345 = 1925 ஆண்டுகள்

❤️ #பாண்டியர்கள் ❤️

#முற்காலப்பாண்டியர்கள்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி
பெரும்பெயர் வழுதி

#கடைச்சங்கப்பாண்டியர்கள்

முடத்திருமாறன்
மதிவாணன்
பசும்பூண் பாண்டியன்
பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி
அறிவுடை நம்பி
பூதப்பாண்டியன்
வெற்றிவேற் செழியன்
கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப்பெருவழுதி 
மாறன் வழுதி
நல்வழுதி
குறுவழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நம்பி நெடுஞ்செழியன்

#இடைக்காலப்பாண்டியர்கள்

கடுங்கோன் → கி.பி. 575-600
அவனி சூளாமணி → கி.பி. 600-625
செழியன் சேந்தன் → கி.பி. 625-640
அரிகேசரி → கி.பி. 640-670
ரணதீரன் → கி.பி. 670-710
பராங்குசன் → கி.பி. 710-765
பராந்தகன் → கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் → கி.பி. 790-792
வரகுணன் → கி.பி. 792-835
சீவல்லபன் → கி.பி. 835-862
வரகுண வர்மன் → கி.பி. 862-880
பராந்தகப்பாண்டியன் → கி.பி. 880-900

#பிற்காலப்பாண்டியர்கள்

மூன்றாம் இராசசிம்மன் → கி.பி. 900-945
அமரப்புயங்கன் → கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் → கி.பி. 945-955
வீரபாண்டியன் → கி.பி. 946-966
வீரகேசரி → கி.பி. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் → கி.பி. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் → கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் → கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் → கி.பி.1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் → கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் → கி.பி. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் → கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1276-1293

#தென்காசிப்பாண்டியர்கள்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1473-1506
குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் → கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் → கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604
வரதுங்கப்பாண்டியன் → கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் → கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் → (தகவல் இல்லை)

❤️#சோழர்கள் ❤️

#முற்காலச்சோழர்கள்
 
செம்பியன்
எல்லாளன்
இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
மாற்றார் இடையாட்சி
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான்
பெருநற்கிள்ளி

#இடைக்காலச்சோழர்கள்

விசயாலய சோழன் → கி.பி. 848–881
ஆதித்த சோழன் → கி.பி. 871–907
பராந்தக சோழன் I → கி.பி. 907–955
கண்டராதித்தர் → கி.பி. 955–962
அரிஞ்சய சோழன் → கி.பி. 962–963
சுந்தர சோழன் → கி.பி. 963–980
ஆதித்த கரிகாலன் → கி.பி. 966–971
உத்தம சோழன் → கி.பி. 971–987
இராசராச சோழன் I → கி.பி. 985–1014
இராசேந்திர சோழன் → கி.பி. 1012–1044
இராசாதிராச சோழன் → கி.பி. 1018–1054
இராசேந்திர சோழன் II → கி.பி. 1051–1063
வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070
அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070

#சாளுக்கியசோழர்கள்

குலோத்துங்க சோழன் I → கி.பி. 1070–1120
விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135
குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150
இராசராச சோழன் II → கி.பி. 1146–1173
இராசாதிராச சோழன் II → கி.பி. 1166–1178
குலோத்துங்க சோழன் III → கி.பி. 1178–1218
இராசராச சோழன் III → கி.பி. 1216–1256
இராசேந்திர சோழன் III → கி.பி. 1246–1279

❤️#சேரர்கள் ❤️

பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் → கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் → கி.பி. 71-129
பல்யானைச்செல்கெழுகுட்டுவன் → கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130
சேரன் செங்குட்டுவன் → கி.பி. 129-184
ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் → கி.பி. 130-167
அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
வாழியாதன் இரும்பொறை → கி.பி. 123-148
குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)
பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 165-180
பெருஞ்சேரலாதன் → கி.பி. 180
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
குட்டுவன் கோதை → கி.பி. 184-194
மாரிவெண்கோ → காலம் தெரியல
வஞ்சன் → காலம் தெரியல
மருதம் பாடிய இளங்கடுங்கோ → காலம் தெரியல
கணைக்கால் இரும்பொறை → காலம் தெரியல
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியல
பெருமாள் பாஸ்கர ரவிவர்மா → கி.பி. 8ஆம் நூற்றாண்டு

❤️#பல்லவப்பேரரசுகள் ❤️

#முற்காலப்பல்லவர்கள்

பப்பதேவன் 
சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I

#இடைக்காலப்பல்லவர்கள் 

குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II கி.பி. 400 - 436
சிம்மவர்மன் I II கி.பி. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I

#பிற்காலப்பல்லவர்கள்

சிம்மவர்மன் III 
சிம்மவிஷ்ணு கி.பி. 556 - 590
மகேந்திரவர்மன் I கி.பி. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கி.பி. 630 - 668
மகேந்திரவர்மன் II கி.பி. 668 - 669
பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 - 690
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கி.பி. 690 - 725
பரமேஸ்வரவர்மன் II கி.பி. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கி.பி. 731 - 796
தந்திவர்மன் கி.பி. 775 - 825
நந்திவர்மன் III கி.பி. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கி.பி. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கி.பி. 850 - 882
அபராஜிதவர்மன் கி.பி. 882 - 901

இவண்
சோழன்.திரு.இங்கர்சால், நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்

நேற்றைய வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே தவிர, தமிழ் பேரரசின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பயிற்றுவிக்கப்பட வில்லை. ஏன் நாங்கள் படித்த காலத்தில் கூட அப்படியொரு கல்வி இருந்ததாக நினைவிலில்லை. சேர சோழ பாண்டியர் எனும் சொல்லாடல் மூன்று மன்னர்கள் என்று குறுகிய புரிதலை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. இலக்கியங்களில் மன்னர்கள் பெயர்கள் வரும்போது, அதனை ஒரு பேரரசின் அங்கமாக நாம் பார்த்ததில்லை. இவற்றை உடைக்க முதலில் நம்மிடம் இருந்த பேரரசின் மன்னர்களின் பெயர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் கதையில் இருக்கும் 5 சோழப் பெயர்களைப் பொதுவாக எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் சேரப்பேரரசு, பாண்டியப்பேரரசு பெயர்களைக் கேட்டால், ஒன்று இரண்டு என்று திக்கித்திணறி நிற்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது. இதனைக் கட்டுடைப்போம் அதற்காக நான் தொகுத்த பட்டியல் கீழ்வருமாறு. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துரையுங்கள், முடிந்தவரை பரப்புங்கள், நன்றி.
பதிவு ~ நாணல்